சேலம் அருகே கார் மோதி விவசாயி பலி !
சேலம் அருகே கார் மோதி விவசாயி பலி - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-14 11:58 GMT
பலி
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ராக்கிபட்டி சேர்வாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (52). விவசாயி. இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்று மதியம் வீட்டிலிருந்து சேலம் நோக்கி டூவீலரில் ரத்தினம் வந்து கொண்டிருந்தார். அப்போது அரசு சட்டக்கல்லூரி அருகே உள்ள பாலமுருகன் கோயில் பகுதியில் வந்தபோது எதிரே வந்த ஆம்னி கார் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது பற்றி ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.