கடலூரில் வரும் 24 ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

Update: 2023-11-20 08:40 GMT

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு, விவசாய மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி காலை 10. 30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கவும், ஆலோசனை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படும். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பமுள்ள விவசாயிகள் அன்றைய தினம் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா், கோரிக்கை விவரம் உள்ளிட்டவற்றை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News