கலவை தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!

கலவை தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-05 10:20 GMT

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

கலவை தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது விவசாயிகள் பேசுகையில், குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது குறித்து விவசாயிகளுக்கு முறையாக தெரியப்படுத்துவதில்லை. பெரும்பாலான கிராமங்களில் இருந்து விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கடமைக்காக நடத்தப்படுகிறது. அதேபோன்று குறைதீர்வு கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வதில்லை. கடமைக்காக அலுவலகத்தில் பணியாற்றும் சம்பந்தமே இல்லாத யாராவது ஒரு ஊழியரை அனுப்பி வைப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் மனுக்கள் கொடுத்தால் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது எங்கள் துறைக்கு சம்பந்தமில்லை என்று பல துறைகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. கடைசி வரை மனுக்களுக்கு தீர்வுகள் கிடைப்பதில்லை என தெரிவித்தனர்.
Tags:    

Similar News