தந்தைக்கு அரிவாள் வெட்டு - மகன் கைது

ராமநாதபுரம் திருவாடானை அருகே தந்தைக்கு அரிவாள் வீட்டில் பலத்த காயம், மகன் மீது கொலை முயற்சி வழக்கு, கைது செய்து போலிசார் விசாரணை.

Update: 2023-12-20 07:15 GMT

பாலகிருஷ்ணன் 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கூடலூர் அருகே உள்ள நத்த கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெரியய்யா. இவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். இரண்டு மகன்கள், மகளுக்கு திருமணம் ஆகி தனியாக வாழ்ந்து வருகிறார். மூத்த மகன் பால கிருஷ்ணன் கோவில் கோவிலாக சுற்றி திரிந்த நிலையில தனியாக சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இளையமகன் ராஜ்குமார் திருமணமாகி தந்தை பெரியய்யாவுடன் வசித்து வருகிறார். இந்தசூழலில் பாலகிருஷ்ணன் தந்தை சரியாக கவனிக்கவில்லை என அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று மாலை பெரியய்யாவும் , ராஜ்குமாரும் வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது அங்கு அரிவாளுடன் சென்ற பாலகிருஷ்ணன் தொடர்ந்து தன்னைப் புறக்கணித்து வருவதாகவும் கூறி தகாத வார்த்தைகளால் திட்டி இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார் இதில் பெரியய்யாவிற்கு குடல் சரிந்தது. தடுக்க சென்ற ராஜ்குமார் சிறுகாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News