பெரியகுளம் அருகே பெண் தற்கொலை
தேனி மாவட்டம் , தாமரைக் குளம் புது காலனி பகுதியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-12 04:48 GMT
தற்கொலை
தேனி மாவட்டம் ,பெரியகுளம் அருகே தாமரைக் குளம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி காமாட்சி 15 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.