மாநில அளவிலான கபாடி போட்டியில் பங்கேற்கவுள்ளவர்கள் இறுதி தேர்வு

மயிலாடுதுறையில் மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் கபாடி போட்டியில் பங்கேற்கவுள்ள கபாடி வீரர், வீராங்கனைகளுக்கான இறுதி தேர்வு .

Update: 2024-01-08 11:46 GMT

கபாடி போட்டி

மாநில அளவிலான 49-வது ஜுனியர் சாம்பியன் கபாடி போட்டிகள் ஆண்களுக்கு கோவையில் ஜனவரி 14, 15 மற்றும் 16-ம் தேதிகளிலும் பெண்களுக்கான கபாடி போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 25, 26 மற்றும் 27-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அணிகள் தேர்வு சாய் விளையாட்டு மைதானத்தில் அமெச்சூர் கபாடி கழகம் சார்பில் நடைபெற்றது. ஆண்கள் அணிக்கு 130 வீரர்களும், பெண்கள் அணிக்கு 70 வீராங்கணைகளும் இந்த தேர்வில் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற தேர்வின் முடிவில், ஆண்கள் அணியில் 17 வீரர்களும், பெண்கள் அணியில் 20 வீராங்கனைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் அணியில் 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மாநில போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்தலைவர் ரஜினி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வெற்றி பெற பயிற்சியில் ஈடுபடுமாறு உற்சாகப்படுத்தினர்.
Tags:    

Similar News