பட்டாசு ஆலையில் தீ விபத்து

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் மூவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-09 16:21 GMT

தீ விபத்து

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் மஞ்சனிஸ்வரர் கோவில் அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல் வேலை ஆட்கள் வெடி பொருட்களை உலர் வைக்கும் பொது வெய்யில் காரணமாக திடீரென தீ விபத்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பணியாளர்கள் அலறியடித்து ஓடினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து தீ விபத்தில் சிக்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் பட்டாசு ஆலையில் வேலை செய்த ஆண்டாள் 35 மற்றும் கவுரி 35 இரு பெண்களும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டு மூவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News