பொதுப்பணித்துறை நிலத்தில் தீ விபத்து

மேட்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பரவிய தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

Update: 2024-02-05 08:01 GMT

தீயை அணைக்கும் பணி

மேட்டூர் அருகே உள்ள வீரன் பட்டியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் செடி கொடிகள், புல், பூண்டு வளர்ந்து காணப்பட்டன. தற்போது கோடை வெயில் தொடங்கியதை அடுத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த செடி ,கொடிகள், புல், பூண்டு காய்ந்து சருகாக மாறியது. நேற்று மாலை அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக சருகுகள் வேகமாக எரியத் தொடங்கி புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து  கட்டுக்குள் கொண்டு வந்தனர். மர்ம நபர்கள் யாரேனும் சருகுகளுக்கு தீ வைதனரா, அல்லது தானாக தீப்பற்றி எரிந்ததா என்பது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை செய்தனர்.
Tags:    

Similar News