புனல்வாசல் ஏரியில் திடீர் தீவிபத்து

கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஏரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-04-20 06:52 GMT

தீவிபத்து

சேலம் மாவட்டம், கெங்க வல்லி அருகே புனல்வாசல் கிராமத்தில் பொதுப்பணித்து றைக்கு சொந்தமான, சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. கடும் வெயில் காரணமாக ஏரியில் மரம், செடி, கொடிகள் காய்ந்து போய் உள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி யளவில் ஏரியில் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது. அப்பகுதியில் புகை மண்ட லம் போல் காட்சியளித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கெங்கவல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலை மையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக் குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரம், செடிகள் எரிந்துபோனது. இந்த தீவிபத்துக்கான கார ணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News