புனல்வாசல் ஏரியில் புல், செடிகள் தீப்பிடித்து எரிந்தது

சேலம் மாவட்டம், புனல் வாசல் ஏரியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

Update: 2024-04-21 16:46 GMT
புற்களில் தீ

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் ஏரியில், புல், செடிகள் கோடை வெயிலுக்கு காய்ந்துள்ளது.

இதில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

Tags:    

Similar News