வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் தீ விபத்து !!!

நாகை மாவட்டம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது.

Update: 2024-06-01 04:45 GMT

தீ விபத்து

நாகை மாவட்டம் சிக்கலில்   வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள மதிப்பு கூட்டு மீன் பொருட்கள் தயாரிக்கும் அலகில் செயல்பட்டு வந்த பழைய குளிர்சாதன பெட்டியில்  நேற்று காலை ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. 

இந்த  மின் கசிவினால் ஏற்பட்ட புகையை கண்ட ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள்  கீழ்வேளூர் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அனைத்து மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அந்த கட்டிடத்தில் தீப்பிடித்த உடன் ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் உடனே மின் இணைப்பை துண்டித்தனர். இதனால்   அந்த பகுதியில் பெரும் தீ விபத்து மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டது

Tags:    

Similar News