இடி மின்னல் தாக்கியதில் வீட்டில் தீ விபத்து - பொருட்கள் சேதம்.

அருமனை அருகே திடீர் இடி மின்னலால் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

Update: 2024-05-10 06:19 GMT

சேதமடைந்த வீடு 

கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு ஊராட்சி வெள்ளச்சிப்பாறை வெட்டுக்குழி பகுதியை சேர்ந்தவர் அப்தூல் ரகுமான்.இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். நான்கு பேரையும் திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது அப்தூல் ரகுமானும், தனது மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது மகள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என இருந்தபோது திடீரென இடி-மின்னல் பலத்த சத்தத்துடன் கேட்டது. 2 இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்ததால் சிறிது நேரம் கழித்து மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. பின்பு இரவு சுமார் 7.30 மணி அளவில் மின்சாரம் வந்துள்ளது.

சிறிது நேரம் கழிந்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு துணிகள் எரியும் நாற்றம் வீசியுள்ளதுஅப்போது பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் வெளியே வந்த பார்த்தபோது ஒரே புகை மூட்டமாக இருந்துள்ளது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அப்தூல் ரகுமானுக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.மகள் வீட்டில் இருந்து உடனடியாக புறப்பட்டு வந்துள்ளார். அப்போது பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்து கொண்டு. இருந்துள்ளனர். இதை பார்த்த அப்தூல் ரகுமான் மனம் உடைந்து திகைத்துப்போய் நின்றுள்ளார். பின்பு தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பிறகு வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.தீ விபத்தில் ரொக்க பணம் ரூ. 31 ஆயிரம் உட்பட சுமார் லட்சம் ரூபாய்க்கான பொருட்கள் மற்றும் சொத்துபத்திரங்கள் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியினர் கூறும் போது, இடி-மின்னல் தாக்குதலில் சேதமடைந்த மின் வயர் மின்சாரம் வந்த பின்பு மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்து இருக்கலாம் என கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News