ஆத்தூர்: தெற்கு காடு பகுதி டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து

ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 200 கே வி கொண்ட டிரான்ஸ்பார்மர் அடிப்பகுதியில் உள்ள மின் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-02-23 02:41 GMT

தீவிபத்து

சேலம் மாவட்டம் ,ஆத்தூர் அம்பேத்கர் நகர் அருகே தெற்கு காடு பகுதியில் சாலையில் 200 கேவி கொண்ட டிரான்ஸ்பார்மரில் தெற்கு காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அடிப்பகுதியில் இருக்கும் மின் பெட்டியில் திடீரென புகை வெளியேறுவதை கண்டு அவ்வழியை சென்ற பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததால் மின்வாரிய அலுவலர்கள் விரைந்து வந்து மின்விநியோகத்தை நிறுத்தினர்.

தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்து தண்ணீரை பீச் அடித்து தீ பரவாமல் இருக்க தடுத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News