பிளாஸ்டிக் பொம்மைகள் குடோனில் தீ விபத்து

தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் பிளாஸ்டிக் பொம்மைகள் தயார் செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

Update: 2024-04-29 11:43 GMT

தீ விபத்து

தூத்துக்குடி திரேஸ்புரம் அருகிலுள்ள மேட்டுப்பட்டி பகுதியில் பைபர் இலைகளைக் கொண்டு பொம்மை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கே இருந்த பைபர் இலை மற்றும் பிளாஸ்டிக் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் தீயில் கொளுத்துவிட்டு எரியத் துவங்கியது.தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக சூழ்ந்தது.

இதைத்தொடர்ந்து விரைந்து அந்த பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் குடோன் அருகே ஏராளமான குடிசை வீடுகள் இருப்பதால் குடிசை வீடுகளுக்கு பரவாமல் உடனடியாக தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனார். தீவிபத்து காரணமாக அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொம்மைகள் எரிந்ததால் கரும்புகை காரணமாக அந்த பொதுமக்கள் அவதி பாதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News