வைகை வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Update: 2023-12-11 04:24 GMT

மீட்பு பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள பனிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையம்மாள், முத்து ஆகிய இருவரும் தங்களது கால்நடைகளை வைகை ஆற்று பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் வைகை ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வந்ததையடுத்து அவர்கள் தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும், கால்நடைகளையும் கயிறுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.
Tags:    

Similar News