குளத்தில் மூழ்கி மீன்பிடி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மீன்பிடி தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-19 06:09 GMT

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி 

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி அசுபதி நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கும் போது நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அசுபதியின் உடல் குளத்தின் கரையோரம் ஒதுங்கியது. இது குறித்து பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News