மீனவர்கள் முற்றுகை நடைபயணம்
ராமநாதபுரம் மீனவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வாங்கியதை கண்டித்து ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் மீனவர்கள் அவர்களது மீனவ அடையாள அட்டையையும் ஆதார் அட்டையும் மாவட்ட ஆட்சியர் ஒப்படைக்க நடை பயணம் மேற்கொண்டு உள்ளனர்.;
மீனவர்கள் நடைபயணம்
ராமநாதபுரம் எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகோட்டிகளுக்கு ஆறு மாத சிலà தண்டனையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாக படகுகளில் கருப்பு கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.மூன்று நாட்கள் நடை பயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட செல்ல உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடை பயணமாக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தற்போது நடை பயணத்தை துவக்கி உள்ளனர்