இனயம் புத்தன்துறையில் மீனவர் ஓய்வறை

கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறையில் 10 லட்சத்தில் மீனவர் ஓய்வறை அமைப்பதற்கு எம்.பி விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-01-15 12:49 GMT
மீனவர் ஓய்வறைக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்

குமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மீனவர் ஓய்வுஅறை கட்டுவதற்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 10-லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ,விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இனயம் புத்தன்துறை அருட்பணியாளர் செல்வம் பிரார்த்தனை செய்து அர்ச்சித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின், கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜகிளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News