மீனவர்கள் அச்சம்

ராமேஸ்வரம் அடுத்த நரிக்குழி புனித அந்தோணியார் ஆலயத்திற்கு அருகே மரத்தேர் அடுத்தடுத்து இரண்டு முறை கரை ஒதுங்கியதால், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2024-01-09 11:58 GMT
ராமேஸ்வரம் அடுத்த நரிக்குழி புனித அந்தோணியார் ஆலயத்திற்கு அருகே மரத்தால் செய்யப்பட்ட தேர் ஒன்று ஒதுங்கி உள்ளதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் ஒதுங்கிய தேரை பார்வையிட்டு விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் ஒரு தேர்வு ஒதுங்கி நிலையில் மீண்டும் அதே பகுதியில் மற்றொரு தேர்வு ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்த உள்ளதோடு  அந்த பகுதி கடத்தல்காரர்கள் கஞ்சா கடத்தலுக்கு தலைமை இடமாகவும் இருப்பதினால் போலீசார் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகிறது. மேலும் மர்மமான முறையில் கரை ஒதுங்கும் தேர் சம்பந்தமாக கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News