ராமநாதபுரம் : அஞ்சு லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்

நெல்லையில் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு இராமேஸ்வரம நகர் திமுக சார்பில் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுள்ளது

Update: 2023-12-21 02:04 GMT

நிவாரண பொருட்கள் வழங்கல்

வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை பகுதியில் தொடர் மழை பெய்து பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் மக்கள் வாழ வழியின்றி தங்குவதற்கு இடம் இன்றி தவித்து வரும் சூழலில் ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள் குடிநீர் காய்கறிகள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் இன்று ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது இந்நிகழ்வில் ராமேஸ்வரம் நகர் திமுகவை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு நிவாரண பொருள் அடங்கிய லாரியை வழி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News