பாம்பு கடித்து பூ வியாபாரி உயிரிழப்பு

மதுரமங்கலம் கிராமத்தில் பூ விற்பனை செய்த பெண்ணை பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி பலி.

Update: 2024-04-23 04:52 GMT

உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் சுங்குவார்சத்திரம் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 60; இவரது மனைவி புஷ்பா, 47, பூ வியாபாரி. அதே பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் அருகே, பூ வியாபாரம் செய்து வந்தார். இம் மாதம் 9ம் தேதி, பூக்கடையில் இருந்த போது, கட்டுவிரியான் பாம்பு புஷ்பாவை கடித்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, புஷ்பா உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News