ஆத்தூரில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ஆத்தூர் நகராட்சியில் உள்ள அறவுசார் மையம் மற்றும் நூலகத்தில் பயிற்சி வகுப்புகளில் இலவசமாக கலந்து கொண்டு பயனடையுமாறு நகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2024-05-04 08:53 GMT

நூலகம்

ஆத்தூர் நகராட்சியில் உள்ள வண்டிபேட்டை (முல்லைவாடி செல்லும் வழியில்) பகுதியில் கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு சிறந்த அறவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய, மாநில அரசுகள் தேசிய வங்கிகள், ரயில்வே மற்றும் IAS, IPS தேர்வுகள் மற்றும் TNPSC, BSRB, RRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமான சுமார் 10,000 புத்தங்கள் உள்ளன.

இதனை பயன்படுத்தி படித்து போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று அரசு வேலைக்கு செல்ல விடும்புவோருக்காக ஆத்தூர் நகராட்சி வண்டிபேட்டை பகுதியில் உள்ள அறிவுசார் மையம் (Knowledge Center) தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது.

பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இம்மையத்தினை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு விரைவில் துவங்கப்பட உள்ள நேரடி மற்றும் பயிற்சி வகுப்புகளில் இலவசமாக கலந்து கொண்டு பயனடையுமாறு நகராட்சி சார்பாக அறிவுப்பு வெளியீடு.

Tags:    

Similar News