வனத்துறை தடை - பக்தர்கள் ஏமாற்றம்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருப்பதால் புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Update: 2024-01-02 06:06 GMT

தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 

நெல்லை மாவட்டம் காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் ஏற்கனவே தடை விதித்துள்ளனர். இதை அறியாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் பாபநாசம் வன சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Tags:    

Similar News