மல்லிகார்ஜுன கார்க்கே-வை சந்தித்த சந்தித்த முன்னாள் நிர்வாகி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்ரமணி சந்தித்து ஆலோசனை பெற்றார்.

Update: 2024-01-07 03:24 GMT
 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வருபவர் கரூரைச் சேர்ந்த பேங்க் சுப்பிரமணியம். இவர், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி கரூர் மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வந்தார். 2024 ஆம் வருடத்தில் நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலை எதிர்கொள்வதற்காக திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் மக்களவைத் தொகுதியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள பேங்க் சுப்ரமணி, இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி னுடைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால், தமிழக தலைவர் அழகிரி ஆகியோர் உடன் இருந்ததனர். மேலும், கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள தலைவர்களை சந்திக்கும் போது, மரியாதை நிமித்தமாக அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
Tags:    

Similar News