காரிமங்கலத்தில் அதிமுக சார்பில் நீர் பந்தல் முன்னாள் அமைச்சர் திறந்து வைப்பு

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அதிமுக நகர கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் கலந்து கொண்டார்.

Update: 2024-04-25 12:17 GMT

நீர்மோர் பந்தல் அமைப்பு

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அதிமுக நகர கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா சேர்மன் மாணிக்கம் தலைமையில் நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவை தலைவர் மகாலிங்கம் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள் உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கேபி.அன்பழகன் கலந்துகொண்டு ஏப்ரல் கோடை நீர் மோர் பந்தலினை திறந்து வைத்தார்.

கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் பனை நூங்கு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார் பொதுமக்கள் தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News