முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முன்னாள் அமைச்சர் மலரஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முன்னாள் அமைச்சர் மலரஞ்சலி செலுத்தினர்

Update: 2023-12-05 13:23 GMT

மலரஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர், செல்வி ஜெ ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் ‌சி. விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட மேடையில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருவுருவப்படம் மலர்களால் ஜோடனை செய்யப்பட்டது.

தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர். .சி விஜயபாஸ்கர் தலைமையில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி கே வைரமுத்து முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்களு முன்னதாக செல்வி ஜெ ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு தீபாரதனைகள் கட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ் எ எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான் வழக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பின்னர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா ஏற்பாட்டின் கீழ் 5000 பேருக்கு அன்னதான உணவுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News