மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

மக்களுடன் முதல்வர் திட்டத்தினை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்தார்.

Update: 2023-12-18 15:45 GMT

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மக்களுடன் முதல்வர் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன். பாலக்கோடு, டிச.18: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் பாலக்கோடு பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்திற்க்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட துனைத் செயலாளர் வழக்கறிஞர் மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணை தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குமார், முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் டார்த்தி, ஆயிஷா, மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் இதாயத்துல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சரவணன், மோகன், ரூஹித்வகாப், ஜோதிலட்சுமி, சாதிக், தீபா, நாகலட்சுமி, திமுக ஒன்றி செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், , பொதுக்குழு உறுப்பிணர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் அழகு, மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News