நிலத்தகராறில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை

அஞ்செட்டி அருகே வரப்பு தகராறு காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது சித்தப்பா மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-30 06:54 GMT

காவல் நிலையம் 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த காணட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன்(62) என்பவருக்கும் சித்தப்பா மகன் பெருமாள்(50) என்பவருக்கு வரப்பு தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலத்தில் நடந்த தகராறில் பெருமாள் தாக்கியதில் நெஞ்சில் அடிப்பட்டு வீரப்பன் உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த பெருமாளை அஞ்செட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News