33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 33 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

Update: 2024-05-26 08:00 GMT

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்துள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் 1991 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பள்ளியில் சந்தித்து பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து தங்களுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்த சந்திப்பு குறித்து பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்ட முன்னாள் மாணவ மாணவிகள் தற்போது செயல்பாடு இல்லாமல் இருக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிலைமையை குறித்து வேதனை தெரிவித்தனர்.எனவே தமிழக அரசு மீண்டும் இந்த ஆலையை இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் பள்ளியையும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்



Tags:    

Similar News