மாஜி யூனியன் கவுன்சிலர் தந்தை மறைவு- எம்.எல்.ஏ அஞ்சலி

பெரம்பலூர் மாவட்டம் தம்பிரான்பட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் தந்தை மறைவையொட்டி அவரது உடலுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அஞ்சலி செலுத்தினார்.;

Update: 2024-01-31 07:20 GMT

எம்.எல்.ஏ அஞ்சலி 

 பெரம்பலூர் ஒன்றியம், தம்பிரான்பட்டி கிராமத்தில், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாலகுமார் . தந்தை நடராஜன் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்அவரது இல்லத்திற்கு நேரில் மறைந்த நடராஜன் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார், இந்நிகழ்ச்சியின் போது திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News