புனித உத்திரிய மாதா ஆலயத்தில் நாற்பதாம் நாள் திருவிழா

கொசவபட்டி புனித உத்திரிய மாதா ஆலயத்தில் நாற்பதாம் நாள் திருவிழாவில் மின் அலங்கார தேர்பவனியில் நடைபெற்றது.

Update: 2024-05-10 10:04 GMT

கொசவபட்டி புனித உத்திரிய மாதா ஆலயத்தில் நாற்பதாம் நாள் திருவிழாவில் மின் அலங்கார தேர்பவனியில் நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டி புனித உத்திரிய மாதா ஆலயத்தில் நாற்பதாம் நாள் திருவிழாவில் மின் அலங்கார தேர்பவனியில் நடைபெற்றது.கடந்த 5-ஆம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதைதொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும், மறுநாள் இரவு மின்தேர் பவனியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மின் அலங்கார ரதத்தில் ஏசுநாதர் எழுந்தருளிய காட்சி நடந்தது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாண வேடிக்கை முழங்க, தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் கும்மியாட்டத்துடன் மின்ரத தேர்பவனி நகர்வலம் வந்தது. அதில் வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். திருவிழா வரும் மே 19-ஆம் தேதிதிருகொடி இறக்கத்தை தொடர்ந்து வேத சாட்சியான புனித தேவ சகாயம் பிள்ளை எனும் சரித்திர நாடகம் நடைபெறும்.

Tags:    

Similar News