திருப்பத்தூரில் மோடியின் தாயார் பெயரில் அறக்கட்டளை

திருப்பத்தூரில் மோடியின் தாயார் பெயரில் பாஜகவினர் அறக்கட்டளை பதிவு செய்தனர்.

Update: 2024-02-15 09:14 GMT

அறக்கட்டளை தொடங்கிய பாஜகவினர்

அரபு நாடான அபிதாபியில் பிரதமர் மோடி ராமரின் கோவிலை திறந்து வைக்கும் இந்த நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவினர் திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபென் மோடி என்ற பெயரில் 46 நபர்கள் கொண்ட அறக்கட்டளையை இன்று பதிவு செய்தனர்.

மேலும் இந்த அறக்கட்டையின் முக்கிய நோக்கமாக ஊழலை ஒழிப்பது, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது, நீர்நிலைகள் மற்றும் கனிம வளங்களை பாதுகாப்பது, இலவச சட்ட உதவி மேற்கொள்வது, திருக்கோவில்களை புரனமைப்பது, உள்ளிட்ட 9 நோக்கங்களை உள்ளடக்கி இந்த அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News