பேருந்து நிழற்குடை கட்டுமான பணிக்கு அடிக்கல்

அரியனூரில் ரூ.6 லட்சத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

Update: 2024-02-12 01:56 GMT
அடிக்கல் நாட்டு விழா
மதுராந்தகம் அடுத்த அரியனூா் கிராமத்தில் ரூ.6 லட்சத்தில்புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஊராட்சி நிா்வாகத்தினா் புதிதாக பேருந்து நிழற்குடை அமைக்க மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ கே.மரகதம் குமரவேலிடம் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தை ஒதுக்கினாா். இந்த நிலையில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் சுதகீா்த்தி ஜெயசந்திரன், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கீதா காா்த்திகேயன், அதிமுக ஒன்றிய செயலா் காா்த்திகேயன், ஊராட்சி துணைத் தலைவா் தணிகைமலை, ஊராட்சிச் செயலா் துளசிலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News