வீராணநல்லூரில் சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல்

Update: 2023-11-17 06:55 GMT
சமுதாய நலக் கூடம் கட்ட அடிக்கல் நாட்டல்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணநல்லூர் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டும் என்பது கடந்த 70 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் அயோத்திதாசர் பண்டிதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அரச. பாண்டியன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ. ஊ) சுகுமார், இராஜசேகரன் (கி. ஊ) , ஒன்றிய பொறியாளர் சந்தான கிருஷ்னன் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News