மண்ணச்சநல்லூர் அருகே கூடுதல் வகுப்பறைகள் கட்ட அடிக்கல்
மண்ணச்சநல்லூர் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டினார்;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 10:08 GMT
அமைச்சர் அடிக்கல்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ. கதிரவன். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.