நாயக்கனூரில் சூதாடிய நான்கு பேர் கைது

மகேந்திரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயக்கனூர் பகுதியில் சூதாடிய நான்கு பேர் கைது 7000 பணம் பறிமுதல்.

Update: 2024-04-27 05:03 GMT

காவல்துறை விசாரணை


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட மகேந்திரமங்கலம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள், நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட் டிருந்தனர். அப்போது, நாயக்கனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கும்பல், காவலர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை காவலர்கள் துரத்திச் சென்று, அதே பகுதியைச் சேர்ந்த சேகர், செல்வம் , ராமன் மற்றும் சங்கர் , ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 ஆயிரத்தை கைப்பற்றி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News