துர்க்கை அம்மன் கோவில் அருகே சூதாடிய நான்கு பேர் கைது

துர்க்கை அம்மன் கோவில் அருகே பண வைத்து சூதாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-01-14 13:46 GMT

கோப்பு படம் 

கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, குளக்காரன் பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், ஜனவரி 13ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் குளக்காரன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகே பணம் வைத்த சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம்,கடவூர் தாலுக்கா, செட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த அருள்மணி, செல்வம், கந்தசாமி, சத்யராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200 ஐயும் பறிமுதல் செய்து,

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags:    

Similar News