கழுகுமலை அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்.

கழுகுமலை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா் மாணவிகள் 247 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Update: 2023-12-02 01:28 GMT

இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை மொ்சி தலைமை வகித்தாா். கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன் 90 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். ஆசிரியை சொா்ணலதா வரவேற்றாா். செல்வபிரியா நன்றி கூறினாா். கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சீத்தா மகேஸ்வரி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா், 157 மாணவா் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
Tags:    

Similar News