விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய எம்.எல்.ஏ.,

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் 832 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Update: 2023-12-23 01:00 GMT

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் 832 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்ட ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.

இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கலந்துகொண்டு 2023−24 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 832 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்து பாடம் கற்க இந்த விலையில்லா மிதிவண்டிகள் உதவியாக இருக்கும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News