நாகப்பட்டினம் : விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

Update: 2024-01-05 02:30 GMT

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ் தலைமை தாங்கினார். மாணவ மாணவிகள் 91 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது . இதில் பள்ளி தலைமையாசிரியர் துரைமுருகு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நத்தர்ஷா, பொருளாளர் செல்லதுரை ஆசிரியர்கள்,, மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News