இலவச கண் பரிசோதனை முகாம்
வீரசிகாமணியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-21 05:35 GMT
கண் பரிசோதனை முகாம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வீரசிகாமணியில் உள்ள விவேகானந்தா வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற ஜூன் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.