இலவச கண் சிகிச்சை முகாம்

அரியப்பபுரத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-26 08:24 GMT
அரியப்பபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

தெற்காசி மாவட்டம்,ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் அரியப்பபுரம் ஊராட்சி, தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று அரியப்பபுரத்தில் நடைபெற்றது. முகாமிற்கு முருகன் (எ) ஜெகன் தலைமை வகித்தார்.

அரியப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ் குமார் முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்தி குமார் மற்றும் கல்லூரணி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தனர். முகாமில் பாவூர்சத்திரம் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் சேகர் , உறுப்பினர்கள் நல்லாசிரியர் மதன சிங், செயலாளர் முருகன், பொருளாளர் விஜயரவி, ராமச்சந்திரன், நாகரத்தினம், செல்வராஜ், குருமூர்த்தி, அனீஸ்குமார், சண்முகம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News