ஓசூர் அருகே சேவா ஓல்டு ஏஜ் ஹோம்- இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சேவா ஓல்டு ஏஜ் ஹோமில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.

Update: 2024-01-29 03:28 GMT

மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஜூஜூவாடியில் ஒசூர் அரிமா சங்கம் மெயின், சேவா ஒல்டு ஏஜ் ஹோம், சத்தியம் ஹெல்த்கேர் இணைந்து இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் மூலமாக நடைபெற்றது. சேவா ஒல்டு ஏஜ் ஹோம் நிர்வாக இயக்குநர் அரிமா நாராயணசாமி அனைவரையும் வரவேற்றார். மருத்துவர்கள் சரவணன், சிவரஞ்சனி, ஆகியோர் தலைமையில் மருத்துவ குழவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் அளித்து, மேல்சிகிச்சைக்கும் பரிந்துரைத்தனர்.

அரிமா சங்க மூத்த நிர்வாகி ஓய்விஎஸ். ரெட்டி, மாமன்ற உறுப்பினர்கள் அசோகாரெட்டி, ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத்தலைவர் ஜெரால்டு, செயலாளர் கார்த்திக், பொருளாளர் லஷ்மிபதி, இணைச்செயலாளர் சுரேஷ், செல்வகேசவன் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News