உத்திரமேரூர் நடைபாதையில் பழ பெட்டிகள் பயணியர் அவதி !
பேருந்து நிலைய நடைபாதையில், இடையூறாக உள்ள காலி பழ பெட்டிகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Update: 2024-03-29 06:24 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இங்கு பயணியருக்கும், இவ்வழியாக செல்லும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடைபாதை பகுதியை ஆக்கிரமித்து பழக்கடைகாரர்கள் காலியான பழ பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பேருந்து நிலைய நடைபாதையில், இடையூறாக உள்ள காலி பழ பெட்டிகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.