சித்தாளந்தூர் திருவேங்கட பெருமாள் சுவாமி கோவிலில் மாசிமாத பவுர்ணமி சிறப்புபூஜைகள்
சித்தாளந்தூர் திருவேங்கட பெருமாள் சுவாமி கோவிலில் மாசிமாத பவுர்ணமி சிறப்புபூஜைகள் நடந்தது.;
By : King 24x7 Website
Update: 2024-02-24 14:09 GMT
சித்தாளந்தூர் திருவேங்கட பெருமாள் சுவாமி கோவிலில் மாசிமாத பவுர்ணமி சிறப்புபூஜைகள் நடந்தது.
எலச்சிபாளையம் அடுத்த, சித்தாளந்தூரில் உள்ள பிரசித்திபெற்ற திருவேங்கடபெருமாள் சுவாமி கோவிலில் நேற்று, மாசிமாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, மூலவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடபெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை 6மணிமுதல் மாலை வரையில் சிறப்பு அபிசேக ஆராதனை நடந்தது. அதேபோல், கோவில் உட்பிரகாரத்தில் உள்ள விநாயகர், கருடாழ்வார், ராகு, கேது பக்தஆஞ்சநேயர், யோகநரசிம்மர், ஹயக்ரீவர், தன்வந்திரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிசேக ஆராதனை நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்துவந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா கோசம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..