பார்களில் சூதாட்டம் - 18 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பார்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2024-02-02 03:28 GMT
மாவட்ட காவல் அலுவலகம் 
விருதுநகரில் செயல்படும் பார்களில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடைபெறுவதாக தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் வந்த நிலையில், விருதுநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் பல்வேறு பகுதியில் உள்ள ல பார்களில் இரவு நேர சோதனை நடைபெற்றது .இதில் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த காளி என்பவர் நடத்தி வந்த சூதாட்ட தனியார் பாரின் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்களும் விருதுநகர் கருமாரி மடம் அருகே  ராஜ்குமார் என்பவர் அலுவலகத்தில் பணம் வைத்து சூத்தாடியதாக 12 பேர் என மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News