கொரவபட்டி பஸ் ஸ்டாப் அருகே சூதாட்டம்: போலீசார் விசாரணை

கொரவபட்டி பஸ் ஸ்டாப் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 650 பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-12 06:42 GMT

காவல் நிலையம் 

கொரவபட்டி பஸ் ஸ்டாப் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 650 பறிமுதல். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, கொரவப்பட்டி பகுதியில் பணம் வைத்த சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகனுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 10ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் கொரவப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கொரவப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாமுனி, வேலுசாமி நந்தக்கால்வரிகம் பகுதியைச் சேர்ந்த மகாசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 650 முதல் செய்தனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News