ரயில்வே பாலம் அருகே சூதாட்டம் - 3 பேர் கைது

வெங்கமேடு ரயில்வே பாலம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-22 07:36 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ரயில்வே பாலம் அருகே பணம் வைத்து சூது ஆடுவதாக வெங்கமேடு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நீலகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில்  வெங்கமேடு ரயில்வே பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட வெங்கமேடு திருநீலகண்டர் தெருவை சேர்ந்த கார்த்தி, கரூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன், வெங்கமேடு திட்ட சாலை பகுதியைச் சேர்ந்த பாபு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-யும் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News