காந்தி நினைவு நாள் : ஸ்தூபிக்கு காங்கிரசார் மரியாதை
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்தூபியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Update: 2024-01-31 05:42 GMT
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்தூபியில் மாநகரத் தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இதில் வர்த்தக பிரிவு மாநகரத் தலைவர் எம்.டி.சுப்பிரமணியம், துணை மேயர் சாரதாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மெடிக்கல் பிரபு , திருமுருகன் மாநில பொதுச்செயலாளர் விவசாய பிரிவு ஆரோக்கியநாதன் மாநகர பொதுச் செயலாளர் ஜாவித் , டிவிஷன் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.