கார்களை அடித்து உடைத்த கும்பல் - போலிஸ் விசாரணை

செம்மங்காலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்ற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-26 04:49 GMT

காவல் நிலையம் 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் தோமஸ். இவரது வீட்டிற்கு செல்லும் வழியில் இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில், இவர் தனது சொகுசு காரை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில், நள்ளிரவு பயங்கர சத்தம் கேட்டதால் தோமஸ் வீட்டின் வெளியே வந்து பார்த்தார்.அப்போது அவரது காரை மர்ம கும்பல் சேதப் படுத்திக் கொண்டிருந்தது. மேலும், அப்பகுதியில், ரோட்டோரம் நிறுத்தி யிருந்த ரெஜின் என்பவரது காரையும் கும்பல் அடித்து நொறுக்கியது. பொதுமக்கள் திரண்டு வருவதை கண்ட கும்பல் தப்பிச் சென்றது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
Tags:    

Similar News